வடக்கு கிழக்கில் வாழும் மக்களும் எமது மக்களே எனவும் அவர்களுக்கு எந்தவித அநீதியும் இழைக்கப்படக்கூடாது எனவும், கொழும்பு அபயராமை விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பின் வாராந்த பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், கருத்து வெளியிட்ட அவர்,
தமிழ் பேசும் மக்களை வேறுபடுத்தாது, இலங்கையர் என்ற உணர்வுடன் பயணிக்கவே தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் விரும்புகின்றனர் என மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் என்னை சந்தித்தித்தபோது , தமிழ் மக்களின் குறைபாடுகளை நீக்கி சகலரும் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுபப வேண்டும் என்பதை தாம் விரும்புவதாக குறிப்பிட்டார்.
அவர் இந்த நாட்டை நேசிக்கின்றார் என்பது எமக்கு தெரியும். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் ஒன்றிணைந்து இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்பதே எம் அனைரினதும் நோக்கமாக உள்ளது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய தமிழ் தலைவர்கள் உள்ளனர்.
முஸ்லிம் தலைவர்களும் உள்ளனர். ஆனால் இனவாத அரசியல் கொள்கையில் அதனைச் செய்ய முடியாது. இன்று நிறைவேற்று ஜனாதிபதி முறைமை தான் இந்த நாட்டின் சாபக்கேடு. மறைந்த மாதுலுவாவே சோபித தேரரும் அதனையே தொடர்ச்சியாக கூறிவந்தார்.
ஒரு நபருக்கு நிறைவேற்று அதிகாரத்தை கொடுத்தால் நாடு நாசமாகும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இன்றும் உள்ளோம். ஒருவருக்கு கொடுக்கும் சகல அதிகாரங்களையும் கொடுக்காது நாடாளுமன்றத்திற்கு அதிகாரங்களை கொடுக்க வேண்டும்.
அதேபோல், வெளிநாட்டு தலையீடுகள் இல்லாது, எமது நாட்டுக்கென்று புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஒரு நபரை இலக்காக வைத்து அதிகாரங்களை பலப்படுத்தவோ அல்லது ஒரு குடும்பத்திற்கு அதிகாரத்தை கொடுக்கவோ தீர்மானிக்காது, முழு நாட்டுக்குமான அரசியல் அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும்.
சகல மதங்களையும் பிரதிநிதித்துவப் படும் விதமாக சகல மக்களின் உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேஇந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, அர்ஜுன் ரணதுங்காவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
ஷிகார் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இங்கு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் உள்ளதால், இந்திய அணியின் முக்கிய வீரர்களான கோஹ்லி, ரோகித்சர்மா போன்றோர் இங்கிலாந்து தொடரில் விளையாடவுள்ளனர்.
இலங்கை தொடருக்காக இந்திய அணி இளம் வீரர்கள் கொண்ட பட்டாளத்தை அனுப்பியுள்ளது.
அதில் ஷிகார் தவான், இஷான் கிஷன், போன்றோர் உள்ளனர். இது குறித்து இலங்கை அணியின் முன்னாள் வீரரான அர்ஜுன் ரணதுங்கா, சீனியர் வீரர்களை தவிர்த்து இளம் வீரர்களை இலங்கை அணிக்கு அனுப்பி வைத்தது சரியல்ல என்றும், எங்களை அவமதிக்கும் வண்ணம் இது அமைந்திருக்கிறது எனவும் கூறியிருந்தார்.
0 Comments
No Comments Here ..