மினுவாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நான்கு பேர் ஆகஸ்ட் 23ம் திகதி தங்களின் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மினுவாங்கொட பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். பென்சில்கொட, கட்டுவெல்லேகம மற்றும் அரங்காவா போன்ற பகுதிகளில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஓபாதாவில் ஒரு பெண் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக வாதுபிடிவெல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸுடன் இணைந்த அதிகாரி ஒருவர் கூறினார்.
0 Comments
No Comments Here ..