18,May 2024 (Sat)
  
CH
சினிமா

நடிகர் ரன்பிர் கபூரை எலி என தெரிவித்த கங்கனா ரனாவத்

ராமராக நடிக்கவிருக்கும் நடிகர் ரன்பிர் கபூரை கங்கனா ரனாவத் வெள்ளை எலி என தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.


நிதேஷ் திவாரியின் ராமாயணா படத்தில் ரன்பிர் கபூர் ராமராகவும், அவரின் காதல் மனைவியான ஆலியா பட் சீதாவாகவும் நடிக்கப் போகிறார்கள் என தகவல் வெளியாகி தீயாக பரவியிருக்கிறது. 


இது குறித்து அறிந்த பிரபல பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ரன்பிர் கபூரை விளாசி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார்

கங்கனா இன்ஸ்டாகிராமில் கூறியிருப்பதாவது, பாலிவுட் ராமயணா வருவதாக கேள்விப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அதில் எலும்பும் தோலுமாக இருக்கும் வெள்ளை எலி ராமராக நடிக்கிறாராம். திரைத்துறையில் உள்ள அனைவரை பற்றியும் மோசமாக பேசுபவர் அந்த நடிகர். பெண்கள் விஷயத்தில் வீக், போதைப் பொருளுக்கு அடிமையாகியிருக்கிறார். 


சிவனாக நடித்தவர் தற்போது ராமராக நடிக்கப் போகிறாராம் என தெரிவித்துள்ளார்.

நிதேஷ் திவாரி படத்தில் ராவணனான கன்னட நடிகர் யஷ் நடிப்பதாக கூறப்படுகிறது. அது குறித்து கங்கனா கூறியிருப்பதாவது, தன்னைத் தானே உருவாக்கி, குடும்ப நபரான இளம் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் வால்மிகிஜி விவரித்தது போன்று ராமராக நடிக்க பொறுத்தமானவர். ஆனால் அவரை ராவணனாக நடிக்க வைக்கிறார்களாம். எந்த மாதிரி கலியுகம் இது. போதைப் பொருள் பயன்படுத்துவர் ராமராக நடிக்கக் கூடாது. ஜெய் ஸ்ரீராம் என தெரிவித்துள்ளார்.


கங்கனா ரனாவத் ரன்பிர் கபூரின் பெயரை குறிப்பிடாமல் விளாசியதற்கு எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பியிருக்கிறது. சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது, கங்கனாவுக்கு மட்டும் எப்படி இது போன்ற வார்த்தைகள் கிடைக்கிறது. திட்டுவதில் கூட கிரியேட்டிவாக இருக்கிறார். ஆனால் கங்கனா கூறுவது போன்று ரன்பிர் கபூர் ஒன்றும் ஒல்லியான வெள்ளை எலி போன்று இல்லை. யஷை ராமராக நடிக்க வேண்டும் என்கிற கங்கனாவின் கருத்தை ஏற்கிறோம் என தெரிவித்துள்ளனர்.


சமூக வலைதளவாசிகள் மேலும் கூறியிருப்பதாவது, தன் பி.ஆர். டீம் செய்வதை விட ஒரு படி மேலே போய் விளாசுகிறார் கங்கனா. அவர் யாரையும் முன்னே விட்டு பின்னே திட்டுபவர் இல்லை. முகத்திற்கு நேராகத் தான் திட்டுகிறார். அவருக்கு மட்டும் இது போன்ற வார்த்தைகள் எங்கிருந்து தான் கிடைக்கிறது என வியக்கிறோம் என்கிறார்கள்.


வெள்ளை எலி என்று ரன்பிர் கபூரை சொன்ன கங்கனா அவரை துரியோதனன் என்றும், பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹரை சகுனி என்றும் விமர்சித்திருக்கிறார். தன்னை பற்றி ரன்பிர் கபூரும், கரண் ஜோஹரும் சேர்ந்து கொண்டு தவறான தகவல்களை பரப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார் கங்கனா. மேலும் ரித்திக் ரோஷன் விகாரத்தில் ரன்பிரும், கரணும் ரெஃப்ரீயாக இருந்ததாக கூறுகிறார் கங்கனா ரனாவத்.


ரன்பிர், கரண் பற்றி கங்கனா சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது, திரையுலகில் அனைத்து வகையான அச்சுறுத்தலும் இருக்கிறது. அதில் மோசமானது துரியோதன் (வெள்ளை எலி), சகுனி (பாபா ஜோ) ஜோடி... திரையுலகில் அதிகம் கிசுகிசுக்கும் ஆட்கள் அவர்கள். அதை அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இது மொத்த திரையுலகிற்கும் தெரியும். சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொள்ளத் தூண்டியவர்கள் அவர்கள் என்றார்.




நடிகர் ரன்பிர் கபூரை எலி என தெரிவித்த கங்கனா ரனாவத்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு