28,Apr 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

டெல்லியில் இருந்து மணிபூர் புறப்பட்ட ராகுல்காந்தி

டெல்லியில் இருந்து ராகுல் காந்தி மணிப்பூர் புறப்பட்டார். மணிப்பூரில் மே மாதம் 3ம் தேதி இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதனால் சுமார் 100 பேர் உயிரிழந்தனர். மேலும் 310 பேர் காயமடைந்தனர். 


மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ராணுவம் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மாநிலத்தில் கலவரம் வெடித்த வண்ணம் உள்ளது. அங்கு இன்னும் அமைதி திரும்பவில்லை.


இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 2 நாள் பயணமாக இன்று மணிப்பூர் புறப்பட்டார். கலவரத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை ராகுல் சந்திக்கிறார். 


இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் உள்ள சமூக அமைப்புகளையும் சந்தித்து பேசுகிறார். மணிப்பூர் கலவரம் தொடர்பாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தை காங்கிரஸ் புறக்கணித்த நிலையில் ராகுல் பயணம் மேற்கொண்டுள்ளார்.





டெல்லியில் இருந்து மணிபூர் புறப்பட்ட ராகுல்காந்தி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு