27,Apr 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

கோரிக்கை வைத்தும் தமிழ்நாட்டிற்கு கொரோனா தடுபூசி அனுப்பதா ஒன்றிய அரசு!

6.25 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்து அனுப்ப தமிழ்நாடு அரசு பலமுறை கோரிக்கை வைத்தும் ஒன்றிய அரசு மருந்து அனுப்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதமே கொரோனா தடுப்பு மருந்துகள் தமிழ்நாட்டில் காலியாகிவிட்டன. 


கோவிஷீல்டு, கோவாக்சின், கார்பிவேக்ஸ் தடுப்பு மருந்துகள் இருப்பு இல்லை. கொரோனா தடுப்பு மருந்துகள் இருப்பு இல்லை என்று ஏப்ரல் 10-ல் மக்கள் நல்வாழ்வுத்துறை ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியது. 5 லட்சம் கோவிஷீல்டு, 50,000 கோவாக்சின், 75,000 கார்பிவேக்ஸ் டோஸ்கள் கேட்டு ஒன்றிய சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டது.


தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு மருந்துகள் காலியாகி இரண்டரை மாதங்களாகியும் ஒன்றிய அரசு இதுவரை தடுப்பு மருந்துகளை அனுப்பவில்லை. தடுப்பு மருந்துகள் இருப்பு இல்லாததால் சென்னையில் 2-வது மற்றும் பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 





கோரிக்கை வைத்தும் தமிழ்நாட்டிற்கு கொரோனா தடுபூசி அனுப்பதா ஒன்றிய அரசு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு