03,May 2024 (Fri)
  
CH
இந்திய செய்தி

கொரோனா வைரஸ் தாக்கம் - இந்தியாவின் புதிய அறிவிப்பு!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியாவுக்கு வெளியேயிருந்து கொண்டுவரப்படும் உணவுகளை ஆய்வு செய்வதற்காக புதிய ஆய்வுகூடங்களை உருவாக்கவுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய மத்திய அரசின் கீழ் இயங்கும் உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைக்குழுவே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு உள்ளே கொண்டுவரப்படும் உணவுகளை ஆராய்வதற்காக 4 ஆய்வு கூடங்கள் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, மீன், இறைச்சி போன்ற உணவுகளை எவ்வாறு பாதுகாத்து விற்பனை செய்ய வேண்டும் என்பது குறித்து புதிய கட்டுப்பாடுகளை அமுற்படுத்தவும், இந்தியாவின் உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.  




கொரோனா வைரஸ் தாக்கம் - இந்தியாவின் புதிய அறிவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு