11,May 2024 (Sat)
  
CH
இந்திய செய்தி

கொரோனா நோயாளர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிக்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் அனுமதி கோரியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மா என்பது இரத்தத்தில் உள்ள திரவ மூலக்கூறு ஆகும். இந்நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவில் நோய் எதிர்ப்பு அணுக்கள் உருவாகியிருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த எதிர்ப்பு அணுக்களுடனான பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டவரின் உடலில் செலுத்தும்போது அவர் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக அனுமதி கிடைத்த பின்னர் தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும் அதற்கான கருவிகள் அரச மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.




கொரோனா நோயாளர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு